Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்:
கும்பகோணத்தை அடுத்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளான திருவிடைமருதூர் திருப்பனந்தாள் ஆடுதுறை கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து திடீரென ஆய்வினை மேற்கொண்டார்.
குறிப்பாக திருவிடைமருதூரில் புதிதாக அமைய உள்ள நீதிமன்றத்திற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணியினையும் ஆடுதுறை வீரசோழன் ஆற்று பாலம் பணிகள் குறித்த ஆய்வினையும் கதிராமங்கலம் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வினையும் மேலும் ஊரக வளர்ச்சி பணிகள் மற்றும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள் ஏரி, குளங்கள் தூர் வாரும் பணி யான குடி மராமத்து பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டார்.